கணபதி தியான மற்றும் வசிய மந்திரம் | Ganapati Dhyana and Vasya Mantra

 

vinaayagar ,ganapathi



கணபதி மந்திரம் : 



இந்த மந்திரத்தை கணபதியின் அனைத்து வசியங்களுக்கும் ,சகல நல்ல காரியங்களுக்கும் பயன்படுத்தலாம் .

 தெளிவாக சொல்கிறேன் கேள் .

வசியம் முதல் மாரணம் வரையிலான எட்டு வகை கர்மங்களையும் சித்தி செய்வதற்கு ஒரு வழி இருக்கிறது . என்னவென்றால் அது கணபதியின் தியானம் ஆகும் .கணபதியின் தியானம் முறையானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது . 

முதலில் ஒரு செப்பு தகட்டில் ஒரு வட்டம் போட்டு அதனுள் ஓம் என்று எழுதிக்கொள்ளவேண்டும் .அந்த ஓம் என்பதற்குள் ஸ்ரீ என்று எழுதிக்கொள்ளவேண்டும் .இந்த சக்கரத்தை கணபதியின் முன்னே வைத்து பூஜை பொருட்களுடன் பூஜை செய்யவேண்டும் .பூஜை  பின்பு கணபதியின் முன்னே அமர்ந்து மனதை ஒருநிலைக்கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் .புருவ நாடு மையத்தில் மனதை நாட்டி அதன்பின்பு கீழே உள்ள மந்திரத்தை சொல்லவேண்டும் .



மந்திரம் : 



 " ஓம் நமோ குரு கிலியும் ஸ்ரீகுரு கணபதி சுவாகா "


மேலே உள்ள ஒருவரி மந்திரத்தை பதினாறு முறை உரு செபித்தால் கணபதி ஒளி உனக்கு காட்சி தந்து கணபதி உனக்கு வசியமாவார் .இதை செய்யும்போது மனதானது ஒரு நிலையில் இருப்பதுடன் வேறு எந்த தெய்வத்தையும் மனதில் நினைக்காது இருப்பது அவசியம் . மிகவும் தெளிவாக எந்த ஒரு அசம்பாவிதமும் நடந்துவிடாத வகையில் இச்செயலை செய்யவேண்டும் .மந்திரத்தை 16 உருவிலும் தவறு இல்லாமல் செபிப்பது அவசியமாகும் .


இவ்வாறு கணபதியை வசியம் செய்தவர் அஷ்ட கர்மயோகம்  செய்த்தால் அவருக்கு அது சித்தியாகும் .மேலும் அறுபத்திநான்கு சித்தும் செய்யும் வல்லமை உண்டாகும் .



                                                                  ...நன்றி ...


கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்